பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 27, 2011

காதல் தீவிரவாதி...

நான்
தீவிர வாதி தான்...

ரசனையான
வாழ்க்கையை
வெறித்தனமாய்
நேசித்த தீவிரவாதி....

சின்ன சின்னதாய்
ஏராளக் கனவுகள்
ஜெலட்டின் குச்சிகளை
என்னிடம் உண்டு....

பெண்ணடிமைத் தனக்
கட்டுப்பாடுகளை
உடைத்தெறிய
பலமுறை
கொரில்லாத் தாக்குதலகள்
நடத்தியதுண்டு
பெற்றோருடன்...

கடைசியில்
காதல் தடுப்புச் சட்டத்தில்
கைது செய்யப் பட்டேன்
குடும்ப கௌரவத்தை
குண்டு வைத்து தகர்த்த தாய்
குற்றச்சாட்டு...

தினம் தினம்
சித்திரவதைகள்
சொல்லடிகள்
இறுதியில்
நாள் குறிக்கப்பட்டது...

முன்பின் அறியாத
அந்நியனின் காலடியில்
ஆயுள் சிறையென
கல்யாணத் தீர்ப்பு
எழுதப் பட்டது....

பூச்சரங்கள்
அலங்கரித்த
அறைக்குள் வந்தான்
புருஷன் எனும் போலீசுக்காரன்...

அன்பான சொல் இல்லை
ஆதரவான பகிர்தல் இல்லை
.........
.....
...
அவ்வளவுதான்
முடிந்து விட்டது...

முதலிரவு
என்கவுண்டரில்
மொத்தமாய்
செத்துப் போனேன்
நான்....

-உமா சம்பத்

No comments: