பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 22, 2011

அவதூறு பேச்சாளி

ஒரு சிற்றாறிடம்
கடலைப் பற்றி
ஒரு முறை பேசினேன்
என்னை ஒரு
மிகைப் படுத்தி பேசும்
கற்பனாவாதி எனச்
சிற்றாறு நினைத்தது!

சிற்றாறைப் பற்றி
கடலிடம்
ஒருமுறை பேசினேன்
குறைத்துப் பேசும்
அவதூறு பேச்சாளி என
கடல்
நினைத்தது!!

ஒவ்வொரு
உயர்ந்த மனிதனும்
அவனது முடிவெடுக்கும்
தன்மையில்
ஏதாவதொரு சிறிய ஒன்று
இருக்கும் என
நான் அறிவேன்!
அந்த சிறிய ஒன்று தான்
அவர்களது
செயலற்ற தன்மையை
பித்துக்குளித் தனத்தை
அல்லது
தற்கொலையினை
தடுத்திருக்கிறது!!

No comments: