பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 27, 2011

ஏரியில் ஒருவன்....

உட்காரப்
புல்வெளி
எதிரே
நீர் வெளி
நீர் மேல் எண்ணெயாய்
சூரியன்
பால் சொட்டுகளாய்
பறவைகள்
முட்டாமல் மோதாமல்
இணக்கமாய் காற்று
தூரத்து ரயிலோசைக்கும்
செவி கூசும் நிசப்தம்...
...........
.....
....

எல்லாம் தவிர்த்து
கவனமாய்க் காத்திருக்கிறான்
கரையில் ஒருவன்
தொண்டை கிழித்து
கண்ணைத் துளைத்த
தூண்டில் முள்ளுடன்
துடிக்கும்
மீன் ஒன்றைக்
காணும் ஆவலுடன்....

-எஸ். கோபிநாத்

1 comment:

விவேகானந்தன் said...

சூப்பர்ங்ணா..
சூப்பர்ங்ணா..