பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 15, 2012

அம்மாவின் படம்

செல்லரித்துப் போய்
பாசி படர்ந்த
சட்டத்துள்
அம்மாவின் கல்யாணப்படம்..

சிரித்த நிலையில்
கருப்பு வெள்ளையிலும்
அழகாக இருக்கிறது
ஆபரணங்களால் ஜொலிக்கும்
அம்மாவின் முகம்...

"அம்மா மாதிரி
சீதனம் போட்டு வந்தவள்
ஊருக்குள் ஒருத்தியுமில்ல"
கணக்கர் வீட்டுக் கிழவி
அம்மாவின் கதை
சொல்கிற போதெல்லாம்
பரணில் தூக்கியெறிந்த படம்
எடுத்துப் பார்க்கத் தூண்டும்...

விடைத்த நாசிக்கு
அழகு கூட்டியிருந்த
ஒற்றை மூக் குத்தியும்
சொந்தமற்றுப் போன பின்பும்
எப்படி
நிலைத்தே இருந்தது
அந்தச் சிரிப்பு மட்டும்...

- மீரா கதிரவன்.

No comments: