பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 15, 2012

ஒலிக்காத ஓசைகள்...

அதிகபட்சத் தனிமையில்
ஒலித்துக் கொண்டிருந்த மணியின் நாவினைக்
கட்டிப்போட்டு விட்டு
உனக்கான
இசையை ரசிக்கத்துடிக்கிறாய்
உன் வசதிக்கேற்ப கர்னாடிக் கஜல் என மாற்றி மாற்றி
இசையை ரசிக்க முடிகிறது உன்னால்
பாவம் மணியின் நாவு
ஒரு வார்த்தையேனும் பேசி விடத்துடிக்கிறது
அதன் குரலை நீ கேட்டு ரசிக்க
வேண்டுமாய்
தனக்கான லயத்தில் ஒலித்து விடவும்
முனைகிறது
சன்னல்களையும்
கதவுகளையும் அடைத்தாகி விட்டது
திரைச்சீலைகளையும் இழுத்து விட்டாயிற்று
துளி வெளிச்சமும் வராதபடிக்கு
இருள் போர்த்தப்பட்ட பிறகு
தேடத்துவங்குகிறாய்
சிறு ஒளிக்கீற்றையேனும்
இப்போது கொஞ்சம் மனமிரங்கி
மணியின் நாவை விடுவிக்கிறாய்
வெகு நாட்களாய்க் கட்டப்பட்டிருந்ததில்
பிடி தளர
நாவு கழன்று தரையில் கிடக்கிறது..

No comments: