பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 15, 2012

பாய்களின் சத்தம்...

கொத்தித் தின்னும்
நம்பிக்கையின் சிதைவால்
நரகமாகும் பொழுதுகளில்
நகர்கிறது வாழ்க்கை

கையகல மண மேடைக்குள்
முடங்க வேண்டும்
பெண் பிரபஞ்சம்
என்பதான
திராவக வீச்சில்  கருகும்
தாம்பத்யத் தோழமையோடு 
விடியல்கள்...

பிரம்மாஸ்த்திரம்
குருஷேத்திர யுத்தம் என
இணைகோடு
இல்லம்...

தீக் குளிப்புக்கு அப்புறம் வரும்
சகஜ சிரிப்பில்
நெகிழ மறுக்கிறது
அஞ்சரை அடி உயரச்
சதையும் ரத்தமும்
நரம்பும் மனசும்
சுருங்கிவிடுகிறது
அவளின் சகலமும்....

ஆனாலும் கேட்கிறது
அக்கம்பக்கத்தில்
பாய்கள்
விரிக்கப்படும் சப்தம்

இங்கே பலபொழுதும்
விரிகிறது படுக்கை
மனைவியின் மன்னிப்பில்....


- ஆண்டாள் பிரியதர்ஷினி

No comments: