பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 15, 2012

சுவடுகள்...

விட்டுச் சென்ற
விருந்தாளியின் புன்னகை
பரிமாறிக் கொண்டிருக்கிறது
அவர்களைப் பற்றிய செய்திகளை...

தூக்குக் கயிற்றின் மீது
ஊர்ந்து நகர்கிறது ஒரு எறும்பு
அதில் பலியாகப் போகிறவனின்
பரிதவிப்பு உணராமல்....

எதிரே குதித்து விளையாடிய
அணில் சொன்னது
உன் கவிதையில்
ஒரு மரத்தை நட்டு வை
அதில் நான் வந்து
விளையாடும் வேளை
நீ உணரலாம்
என் அன்யோன்யம்...

நான் அனுப்பி வைத்த
பொய்கள் எல்லாம்
திரும்பிக் கொண்டிருக்கின்றன
என்னிடமே
இன்னும் சில பொய்களை
அழைத்துக் கொண்டு....

கண்களில் ஆரம்பிக்கும் ஏணி
வானம் வரை நீள்கிறது
இனி என் வீடு வந்து போகும்
நிலவும்
நட்சத்திரங்களும்....

-ராஜா சந்திர சேகர்...

No comments: