பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 5, 2012

எல்லோரையும் விட...

அப்பேருந்து நிலையத்தில்
அப்படியொன்றும் கூட்டமில்லை
எனக்கான பேருந்தும் அதனிடத்தில்
ஜன்னலோரமாய் நீ
அனிச்சையாய் உதிர்கிறது
விரலிடுக்கின் சிகரெட் துண்டு
அமர்கிறேன்
உனைப் காண ஏதுவான இருக்கையில்
அழகு
காதோரச் சுருள் முடியும்
நீண்ட கூந்தலும்
கண்களில் பெயர் தெரியா நாட்டியம்
அல்லது நாடகம்
பேருந்து நகர
நானோ
உனக்கானதொரு கவிதையை
தொடங்குகிறேன்
அடுத்த நிறுத்தம்
இன்னொருத்தி வருகிறாள்
இவளும் அழகு
தெற்றுப் பல்
குதிரை வால் சடை
காற்றில் விளையாடுமதில்
நானும்
நீர்ச் சுழியில் சருகாய் மனம்
யார் அழகு... ?
இன்னும் சில நிறுத்தங்கள்
இன்னும் சில பெண்கள்
இருப்பதோ இரு விழிகளும்
ஒற்றைப் பார்வையும்
இடையில் ஏறியவர்கள் எல்லாம்
இடையிடையே இறங்கிவிட
நீ மட்டும் இருக்கிறாய்
உறுதியாய்ச் சொல்கிறேன்
எல்லோரையும் விட நீ தான் அழகு...

No comments: