பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 5, 2012

என் கைகளையும்…


என் கைகளையும் இதயத்தையும் விட்டு விடு.
, என்னை விட்டு விடு !
உன் உடலின் பாதல் வழி
என் விரல்களை ஓட விடு.
மோகம்குருதியும் தீயும் முத்தங்களுமாக
துடிக்கும் தீ நாவுகளால் என்னை எரிக்கிறது.
இது என்னவென்று உனக்குப் புரியாது.

என் நரம்புகளின் உணர்வுக் காடுகளூடாக
ஓடும் புலன்களின் புயல் அது.
மோக நாவுகளால் சதை இப்படிக் கத்துகிறதே !
எத்துணைப் பெருந்தீ !
பெண்ணே, கன்னி ஒளி போல நீ இருக்கிறாய்.
கருகிப் போன என் உயிரோ
இரவின் விண்மீன்கள் நிறைந்த உன் உடலை நோக்கிப்
பறந்து வருகிறது.

என் கைகளையும் இதயத்தையும் விட்டு விடு.
, என்னை விட்டு விடு.
காதல் அன்று,
ஆசைதான் மெதுவாக அவிந்து போகிறது.
மோக வெறியே மழையாக,
சாத்தியமற்றதைத் தேடுவதாக
ஆனால், உன்னிடம் இருப்பதையெல்லாம்
எனக்குத் தருவதற்காக
இதோ நீ இருக்கிறாய்.
உன்னை அணைப்பதற்காக
உன்னை விரும்புவதற்காக
உன்னைப் பெறுவதற்காக
நான் பிறவி எடுத்துள்ளது போல்
உன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எனக்குத்
தருவதற்கென
நீ பிறவி எடுத்துள்ளாய் !

No comments: