பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 31, 2012

நானும் ஒரு சிறுவனே...


இன்று காலை ஒரு மின் ரயில் ஒன்று கடப்பதற்காக பூட்டப் பட்ட ரயில்வே கேட் முன் நின்றிருந்தேன். ரயில் பாதி கடக்கும் போதே ஒரு சிறுமி தன் கையினை நீட்டி "டா டா" காட்டிய படி பயணித்துக் கொண்டிருந்தாள். நானும் பதிலுக்கு என் கைகளை அசைக்கத் தொடங்கினேன். எங்கே செல்கிறாள், நான் யார், அச் சிறுமி யார் என்பது பற்றியெல்லாம் நான் கவலைப் படுவதில்லை. அச் சிறு பெண்ணுக்கு மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி...

சுற்றிலும் இருந்த நாகரிக கூட்டம் என்னை வித்தியாசமாய் பார்த்தது. அதைப் பற்றியெல்லாம் கவலைப் பட எதுவுமே இல்லை. நான் பதிலுக்கு கையசைத்ததும் தன்னுடன் இருந்த மற்ற சிறுவர், சிறுமியரிடம் சொல்ல, ரயில் என்னை கடந்து சிறிது தூரம் செல்கையில் என்னை நோக்கி ஐந்து, ஆறு கைகள் அசைந்து கொண்டிருந்தன... நல்ல வேளை மற்றவர்களைப் போல் எனக்குள் இருக்கும் சிறுவனை நான் கொன்று விடவில்லை... :-)

உங்கள் பயணம் இனிதாக அமையட்டும் குட்டீஸ்....

No comments: