பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 8, 2012

மஞ்சரளிமுகம்


அந்தியின் விழிப்புகளில்
கவிதைகள் வாசித்தபடி
கரம் பற்றி நடக்கிறாய்
மஞ்சரளித் தோட்டத்தினூடே
பள்ளி உறவுகளைப் பதியம் வைக்கையில்
கருப்பு குண்டன் என
வர்ணித்துச் சிரிக்கிறாய்
கண்களைச் சிமிட்டியபடி
கோபமாய்ச் சிணுங்கும் என்னிடம்
கொஞ்சலாய்ப் பேசி
சிறகடிக்கச் செய்கிறாய்
நீ நட்ட மரத்தின் காற்றையும்
கூடடையும் பறவைகள் பேச்சையும்
கைபேசிவழி
என் செவி சேர்க்கிறாய்
பால் மாற்றி விளித்தபடி
பால்யத்துக்குள் சிக்கிக் கொண்டு
மீள மறுக்கிறோம்
வயதுகளைத் தொலைத்தபடி
உருவம் அறியா உறவின் தன்மைக்கு
ஒற்றை முகம் எதற்கு?
ஓராயிரம் உருவகங்கள் இருக்கையில்!

No comments: