பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 8, 2012

விரல்மொழி


சற்று நேரமாவது

உன் விழிகளை

நேர் நோக்கியிருந்திருக்கலாம்

மெல்ல இமைமூடி, இதமாக

உள் தோளில் சாய்ந்திருக்கலாம்

கேசம் கலைந்திருந்த

உன் நெற்றியில் அழுத்தி ஒரு

முத்தமிட்டிருக்கலாம்

அவசரமாய் அங்கும் இங்கும் ஓடி

பேருந்தில் எனக்கொரு

இடம் தேடிக் களைத்த

சன்னலோரக் கம்பிகளில்

கைபதித்தப் பேசிக் கொண்டிருந்த

கடைசி நொடியிலாவது

மென்மையாக உன் விரல்களை

ஸ்பரிசித்திருக்கலாம்

எப்போதும் எனக்குள்

காலம் தாழ்த்தியே

முளைக்கின்றன

கவிதைக் கன்றுகள்...

No comments: