பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 28, 2011

அவன்....


இப்பொழுதெல்லாம்
இரவு வந்து விட்டால்
நடுங்குகிறது என் மனம்
என் இருண்ட அறைக்குள்
எவனோ ஒருவன்
நுழைந்து விடுகிறான்
எதிர்பாரத நொடியொன்றில்..
அவன் காலடி ஓசைகளையும்
சுவாசத்தின்
தகிப்பையும்
உணர்கிறேன்
மிக மிக அருகாமையில்...
காமத்தின் வலிமையான
சவுக்கின் வீச்சில்
என்னை
சிதறடித்து
என் கண்களில் குருதி
வழிய உறக்கம்
பிடுங்குவான்....
திடுமென விழிக்கிறேன்
ஒரு பிசாசினைப் போல்
ஓலமிடுகிறது ஒரு குரல்
அவனின் கடுமையான
தாக்குதலில்
நான் வீழ்ந்த பின்னரே
அகலுகிறான்...
மறுநாள்
பயத்துடன்
விளக்கை அணைக்காமலேயே
படுக்கை நுழைகிறேன்
முன்னிரவில்
உறங்கியும் போகிறேன்
நடுநிசி பொழுதில்
கனவென்ற போர்வையில்
மீண்டும் வருகிறான்
அவனே..

No comments: