பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 28, 2011

சில நொடிகள்...

என் உலகத்தின்
சிறந்த புதிர்களுக்கான
பரிசை எப்பொழுதும்
நீயே வெல்கிறாய்...
வண்ணங்கள் குழைத்து
உயிர் பெற்ற
ஓவியங்களில்
விரயமாகும் கனவுகள்..
எழுத்துகளெல்லாம்
பதுங்கிக் கொள்கின்றன
சொற்களில் கட்டுண்டு,
அனாதையாய் நீள்கிறது
கவிதையொன்று...
சல சலக்கும்
நீரோடையில்
கால் பதிக்கையில்
என்னில் பட்டு
செல்லும் நீர் துளிகள்
குளிர் நீங்கி கொதிக்கிறது...
சந்தேகமில்லை
நானே தான்,
மணிகணக்கில்
தேடுகிறேன் கண்ணாடியில்...
இன்று
உறங்கிப் போகவேண்டும்
என் மனம்
விழித்துக் கொள்ளும்
முன்னதாக...
யாருக்கேனும் கிடைத்தால்
கொடுத்துச்
செல்லுங்கள்
முடிவுறாத என் கவிதையின்
சில வரிகளை...
உதிர்ந்த சருகுகள்
காயும் புல்வெளி
காற்று அற்ற வெளி
இவற்றிலும் வளர்கிறது
அவள் நினைவு...
ஒற்றை அறை
வாடகை வீடு
உறவினர் வருகையில்
பார்வையில்
கசிந்து உதிர்கிறது
காமம்...

No comments: