பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 2, 2011

நீண்ட தெருவும் சில பூக்களும்...

இப் பெருநகரத்தின் எதாவது ஒரு
நீண்ட தெருவில்
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில்
இருவரும் எதிரெதிர் திசைகளில்...
நெருங்கும் நம் இருவருவரின் பார்வைகளும்
கண நேர சந்திப்பில் திடுக்கிட்டு இயல்பாகலாம்...
முன் செல்லும் குழந்தையை
அதட்டி நீ அழைக்கும் போது
தனித்து விட்டுப் போன என்னையும்
அழைப்பதாகவே இருக்கும்...
எப்படியும் நலம் விசாரிக்கப் போவதில்லை
கேட்டாலும் பொய் சொல்லத் தெரியா
உதடுகளும் என்னிடம் இல்லை...
நினைவிருக்கிறதா?
சில வருடங்களுக்கு முன்
இதே நீண்ட தெருவில்
சில மரங்கள் பூக்களை
தூவிக் கொண்டிருந்தது...
இருவரும் கை கோர்த்து
அலைந்தபடி இருந்தோம்...
இன்று மரங்கள் இல்லை
நம் காலடியில் நசுங்கிய பூக்களும்
எனக்கென நீ விட்டுப் போன காதலுமாய்
நீண்டு கொண்டே...


No comments: