பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 2, 2011

மௌனமாகும் புல்லாங்குழல்....

முக நூல் கவிதையொன்று...


ஏன் அடர்ந்த மௌனத்தை
இசைத்துக் கொண்டிருக்கிறது
உன் புல்லாங்குழல்...

மேகத்தில் எழுதிவிட்டேன்
என் கனவுகளை...
அதுதான்
மழையாய்ப் பொழிந்திருக்கும்
நேற்றிரவு உன் வாசலில்...

பேசாமலே இருந்திருக்கலாம்
வசந்தமும் தெரியாது
வலியும் தெரியாது
பேசாமல் இறந்திருக்கலாம்....

உன் மௌனங்களால்
விழுங்கப்பட்ட
என் வாழ்கையின் துயரங்களை
சொல்லி அழுகிறது
மேகங்கள்....

- தீபு நல்லசிவம்

No comments: