பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 2, 2011

தொலைகிறது சுயம்...


இன்னும் அமைதியாகத்தான் இருக்கிறாய் நீ
உள்ளுக்குள் சுழலும் சூறாவளிகளை மறைத்து
நானும் இயல்பாகவே இருக்கிறேன்
மனதின் நடுக்கங்களை பூட்டிக் கொண்டு
ஒரு நதியின் பெரு வெள்ளமதில்
புரட்டப்படும் சருகென தொலைந்து போகிறது சுயம்
மௌனங்களை சுமக்கிறேன்
மொழிகளை தீயிலிட்டுக் கொளுத்தி
சில நேரங்களில் பூக்களின்
பாரம் தாங்காமல் ஒடிந்து விடுகிறது காம்புகள்
நானும் எதிர் பார்த்தே காத்திருக்கிறேன்
என்னை தாங்கிப் பிடிக்கும்
உன் ஒற்றைச் சொல்லுக்கோ
உயிருடன் எரித்து விடும் நினைவுகளின்
கடும் சினத்திற்கோ...

No comments: