பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Nov 13, 2011

சிறு துளிகள் - இரண்டு

எனக்கென நீயும்
உனக்கென நானும்
வாழ்ந்தது போதும்...
எனக்குள் நீயும்
உனக்குள் நானுமாய்
வாழ்வோம் இனி...

உன்னுடன் பேசாமல்
இருக்கும் நாட்களில்
உன்னை நினைத்துக்
கொண்டிருப்பதை தவிர
வேறு எதையும் செய்வதில்லை நான்...
நீ இன்றி நான் வாழ முடியாது
சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
நீ வந்துவிடவில்லை
நான் செத்துவிடவில்லை
நம்மைப் பார்த்து சிரிக்கிறது
காதல்...
நீ
இந்த ஒற்றை எழுத்தின்
வளைவுகளில் கூட சிக்கிக் கொண்டு
துடிக்கிறது இங்கொரு உயிர்...
என் எல்லா தவறுகளையும்
சரியாக்கியவள் நீ...
நீ போன பின்பு
தவறுகளே அற்ற வாழ்வு
மிகக் கொடுமையாய்...
வன்மையான சொற்களும்
கொடுமையான மௌனங்களும்
உன் மென்மையான இதழ்களுக்கு
கொஞ்சம் கூட பொருந்தவில்லை...
நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?
ஆம்....
ஏனெனில்
அது மகிழ்சியாக நடிப்பதை விட
சுலபமானது...
உனக்கும் எனக்குமான
சில ரகசியங்களை
நீ மழையிடம் சொல்லி இருக்கிறாய்
நதியிடமும்
ஒரு இசை தட்டிடமும்
மூன்றுமாய் எனை கேலி செய்ய
இனி நான் நம் ரகசியங்களை
கடலிடமும்
பறவைகளிடம்
சொல்லப் போகிறேன்...
வருந்திச் செல்கிறது
ஒரு மனங் கொத்திப் பறவை...
உன்னை விட
என் மீது அன்பு செலுத்த
வேறெவரும் இல்லையென.....
என்னை விடவும்
எனக்கு நெருக்கமானவள்
நீ...
கல்லறை வாசகத்தை தேர்ந்தெடுக்க முடியுமென்றால், இந்த வாசகங்களை செதுக்க நான் கேட்டுக் கொள்வேன்...

" அவன் இறந்துவிட்டான் - உயிருடன் இருக்கும் போதே..."
தினமும் கதறி
அழுவதை வேடிக்கை
பார்த்த பின்னரே
தாலாட்டை துவங்குகிறது
இரக்கமற்ற இரவுப் பொழுது..
இப்படித்தான்
அன்பு தொலைந்து போகிறது
இந்த நேரத்தில் அன்பு செலுத்த வேண்டும்
இத நேரத்தில் அன்பு செலுத்தக் கூடாது
என்கிற விதிமுறைகளுக்கான விதிகளை
நாம் விதித்துக் கொள்கிற
நிமிடங்களில்...
நாம் சண்டை போட
காரணங்களே தேவை இல்லை
காதல் மட்டுமே
போதும்...
தேவையற்ற காரணத்தைச் சொல்லி
அலைகிறேன்
உன் வீடிருக்கும் தெருவில்
உனைப் பார்த்து விட...



No comments: