பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Nov 13, 2011

காத்திருக்கிறாள்

எப்பொழுதும்
பெண்ணொருத்தி காத்திருக்கிறாள்
வாசல் படிகளில்
மழைகாலத்தில் குடையொன்றை தாங்கியபடி
கண்களில் மின்னி மறையும் கனவுகளோடு
கூர்ந்து நோக்கும் விழிகளில் வெறுமையோடு
ஒற்றை மலரோடு இல்லை மல்லிகை சரங்களோடு
மற்ற அனைவரையும் போலவே
குழந்தை நினைவுகளோடு
இன்னும் இன்னும்
நிறைய சொல்ல முடியா
சோகங்களோடும் மகிழ்வுகளோடும்
பெண்ணொருத்தி காத்திருக்கிறாள்
வாசல் படிகளில்...

No comments: