பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 13, 2011

நாளைக்கென...


விழியில் ஒளியும் நிறங்களை எங்கு தேட...
இன்னும் ஒருநாள் தேவைப் படுகிறது
உன் மீதான கோபத்தை நியாயப் படுத்த...
நெடுஞ்சாலையின் ஓரத்தில்
சிரிக்கும் மஞ்சள் மலர்களில் நிறைகிறது
அலைபேசியின் நினைவகம்...
பூனைக் குட்டிக்கான தட்டில் பால்
கண்டு அழுகிறது பக்கத்து வீட்டு குழந்தை...
உருமாறிக் கொண்டே அலைகிறது மேகம்
மேகமாகவே தோன்றுவது எப்பொழுது...
உதிரும் விண்மீன்களில் லயித்து
கூடவே உதிர்கிறது மனசு...
ஒவ்வொரு நாள் முடியும் போதும்
நாளைக்கென சில விஷயங்கள் பத்திரமாய்...
சிரிப்புகளுடனே கலந்திருக்கிறது
சில கண்ணீர் துளிகளும் சோகங்களும்...
விடைபெறும் வேளை வரும் பொழுது
அழும் மனதும் சிரிக்கும் உதடும் நம்மிடம்..
தெரிந்து கொள்ள வேண்டாம் என நினைக்கும் பொழுது
அதீத ஆர்வம் உள்ளுக்குள் துடிக்கிறது...
எதை எதையோ எழுதிக் கொண்டு விரல்கள்
என்ன செய்து கொண்டிருப்பாய் என
யோசிக்கும் மனதுடன்...

No comments: