பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 4, 2011

நீ இல்லா நொடிகளில் 5

மழைச் சாரலோடு
விடிகிறது இன்றைய
காலை
உன் நினைவுகளோடு
விழிக்க மறுத்து
கற்பனைகளில் விழுந்து கிடக்கிறேன்
நிஜங்கள் பயமுறுத்தும்
நாளொன்றை சந்திக்க
இயலாமல்....

நேசிக்கவும்
கோபம் கொள்ளவும்
அன்பாய் அணைக்கவும்
பிடிக்கவில்லை என
நிரந்தரமாய்
விலகி நிற்கவும்
என்னிடம் மட்டுமே
சாத்தியமாகிறது
ஏனெனில்
நான் உனக்கானவன்...

புத்தகங்களோ
இசையோ
விடுமுறை
நாளில் பொழியும்
மழையையோ
மறந்து விட்டு
நமக்கான ஒரு கனவில்
அடைத்துக் கொள்கிறேன்...

மனதின் ரணங்களுக்கு
மயிலிறகால் மருந்திட்டவள் நீ
ஆறிப் போன
வடுக்களோடு
என்றுமே ஆறிவிடாத
காயங்களை நீயும்
தருவாயா என்ன?

ஒரு நாளின் தவறுக்கென
என்னை வெறுத்து
நிற்கும் உனக்கு
என்னைப் போல ஒதுக்கி
விடும் உறவு சுதந்திரம்
என்னிடம் மட்டும்  தானே...

விலகிப் போன
உன்னால் இந்த
உலகையே வெறுக்கத்
துடிக்கும் எனக்கு
அழகிய உலகென
நீ இருந்ததை
மறந்து விடுவாயா என்ன?

No comments: