பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 4, 2011

மன்னிப்பு மனிதர்களுக்கு மட்டுமே

வெளியில் முகமூடிகளோடு
மனதில் மிருகமென
அலைகிறேன்
பெருகும் ரத்த வேட்கையோடு...
நேசித்தலுக்கும்
புரிதலுக்கும்
இன்னும் பக்குவப் படாத
மனம்  இன்னும்
வனாந்திரங்களிலும்
குகைகளிலும்...
எப்பொழுதும் அகலிகைகளே
பாதம் பட காத்திருக்க வேண்டுமா
இங்கே என் போன்ற
துரியோதனர்களும்
சீதையின் வரவை நோக்கி...
குருதியின் வேகமும்
திமிரும் அடங்கும்
வேளையொன்றில்
வேதனைகளை சொல்லி
மன்னிக்கக் கோருவேன்
முகத்தை மறைத்துக் கொண்டு...
உண்மையான நேசத்தின்
உறவொன்றை
நேசத்தின் பெயராலேயே
காயப் படுத்திய உயிர்கள்
இருப்பது பாரம் தான்
இவ்வுலகில்...
கண்ணீரின் புனிதங்களை
தொலைத்தவன்
அழுவதில் எந்த
நியாயங்களும்
மதிக்கப்படுவதில்லை...
செய்த பாவங்களுக்கான
நரகத்தை
பிரிவின்
வலிகளே தரும்
தண்டனைகளென...

No comments: