பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 7, 2011

கண்ணீர் சாரல்


குளிர் சாரல்
நுரை பொங்கும் அருவி
தாவிக் குதிக்கிறது தண்ணீர்
கணவனோடு கைகோர்த்து
உச்சியில் நீர் விழும் பொழுது
உன் கால்களினடியில் மூச்சிரைத்து
சாகிறது என் காதல்
ஓடும் நீரோடு இரு துளி
கண்ணீர் கலந்து
மன்னிப்பை கூறுவாய்
துண்டுகளாய் சிதறிய
இதயத்திடம்...

என்னிடம் ஆயிரம்
கேள்விகளுண்டு
உன்னிடம் ஒற்றை பதில்
அதுவும் எனக்கானதாய் இல்லை
புன்னகைக்கும் உன்
உதடுகளின் ஓரத்தில்
நீ குவித்து வைத்திருந்த
நஞ்சு
எனக்கானதாய் இருக்கிறது...

என் பாடலின்
ஒவ்வொரு பல்லவியும்
சரணமும்
முகாரியிடம் மண்டியிடுவது
ஏனென்று தெரியவில்லை
கனவுகள் மட்டுமே
வாழ்வென ஆன பின்
உறக்கத்தை தொலைத்தவன் நான்...

இந்த வெறும் வார்த்தைகள்
செவிகளை எட்டப்போவதில்லை
அருவியின் சாரலில்
லயித்து கிடக்கும் உனக்கு
நிஜங்கள் துரத்தும் ஒரு நாளில்
நீயும் நானும்
பேசப் போவதில்லை
ஆனாலும் இந்த வரிகள் பேசிடும்
நீரின் குளுமையையோ
நம் நேசத்தையோ...

No comments: