பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 7, 2011

உடன்படிக்கை


உனக்கும் எனக்குமான
காதல் உடன்படிக்கையின்
பக்ககங்களை கிழித்தெறிகிறது
நிகழ்கால ஏமாற்றங்கள்....

விசும்பல்களுடன்
மூடிப் படுக்கையில் அருகில்
புரண்டு கொண்டிருக்கிறது
உனக்கான கவிதைகள்....

கண்ணீர் துளிகள் உணவாகும்
என்றொரு நிலை வந்தால்
இனி நான் யாரிடமும்
யாசிக்க வேண்டி இருக்காது...

கிழிந்து போன நினைவுகளை
நெய்து வருகிறது கனவுகள்
மீண்டும் புதிதாய் கிழித்து
வேடிக்கை பார்க்கிறது உன் விருப்பம்...

காரணங்களே இன்றி
தண்டிக்கப்ப் படுபவனுக்கு
ஆறுதல் மீது என்ன
அக்கறை இருந்துவிடப் போகிறது...

திசையெல்லாம் முட்கள்
பரப்பி நடக்கிறேன்
இதயத்தை விட
பாதங்களுக்கு வலிமை அதிகம் என....

காலின் கீழ் நசுக்கப் பட்ட
சிகரெட் துண்டுகளாய்
மனதின் ஏக்கங்கள்
புகைந்து கிடக்கிறது...

மதுவின் கசப்பும்
தொண்டையின் எரிச்சலும்
என்ன செய்து விட முடியும்
நினைவு ரணங்களை....

உதிர்ந்த இறகுக்கும்
பிடுங்கப்பட்ட சிறகுக்குமான
வேதனைகளை வீசும்
காற்று அறிந்திருக்குமா என்ன?...

தனிமையும்
பிரிவும்
கொடூரம் என்றாய்!
இன்று தனித்திருப்பது நான் மட்டுமே...

வெளியூரோ வெளி நாடோ
உன் அருகாமையின்றி வெறுமையாய்
என்பாய்!
புகைப் படங்களில் புன்னகை நிரப்பி...

உணர்வுக்கும் அறிவுக்குமான
போட்டிகளில் பெரும்பாலும்
அறிவே வெல்கிறது
நீ அறிவாளி....

இறுதியாய் கேட்டாய்
எனக்கான கனவுகளை
நீ ஏன் வளர்த்தாய் என
விதைத்தவள் நீயன்றி யார்....

No comments: