பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 7, 2011

ஒரு கனவும் சில நிஜங்களும்


ஒவ்வொரு வார்த்தைக்கும்

ஒரு வண்ணத்துப் பூச்சி

என்னுள் உன்னால்

உனக்காக....

வெடித்து சிதறும்

கண்ணீர் துளிகளில்

சேகரித்து வைத்த

உனக்கான கனவுகள்...

பயணங்கள் இதமானவை

உன்னோடு பயணிக்கும் போது

சிறகுகள் விரித்து

என்னோடு பறக்கிறது வானம்...

காதல் பறவைகள் என

மனதில் நான்

வளர்த்தவை உதிரம்

குடிகின்றன பசிக்கு...

சிதறிக் கிடந்த

எண்ணங்களை ஒன்றாக்கி

எனக்கு பரிசளித்தது

உன் காதல்...

என் கருவிழிக்குள்

ஊசி ஒன்றை இறக்கி விட்டு

நேசத்தின் வண்ணமென்று

ஓவியத்தை வரைகிறாய்...

அன்பான உன்

முத்தங்கள் எனக்கு

சில வினாடி பூகம்பங்கள்

பூ... கம்பங்கள்... உன் இதழ்களாய்...

ஒவ்வொரு முறையும்

உனக்காக காத்திருந்து

ஏமாறுவது வேடிக்கை என

நினைத்திருந்தேன் இது வரை...

என்னால் என்ன

செய்ய முடியும்? அடிக்கடி சொல்வாய்!

என் சாவு ஊர்வலம் வரும்

ஒரு நாளிலும் அதே போலித்தனம் தொடருமா என்ன?

No comments: