பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 6, 2007

என் நினைவுகளிலிருந்து


என் நினைவுகளிலிருந்து

எழுந்து செல்லும் வண்ணத்து பூச்சி

செல்லும் முன் என் மீது

உன் நினைவுகளை வண்ணங்களாய்

வாரி இறைத்து செல்கிறது


வெள்ளி காசுகளை அருவியில்

கொட்டி விட்டு தேடி கொண்டிருக்கிறேன்

அக்கரையில் அமர்ந்து கேலி செய்கிறாய்

நான் தேடி கொண்டிருப்பது

காசுகளை அல்ல

நதியில் தெரியும் உன் பிம்பத்தை....


நான் ஓவியன் தான் மறுப்பதற்கில்லை

ஆனால் இருவரையும் சேர்த்து

வரைந்தே பழகி இருக்கிறேன்

உன்னை மட்டும் தனித்து வரைய சொல்கிறாய்

என் விரல்களை கேட்டிருக்கலாம்.....


உன் நினைவுகள்

துயரத்தையோ, மகிழ்ச்சியையோ

தந்து விடலாம்

சிறிது கால இடைவெளிக்கு பின்

இந்த துயரம் ஒரு பெரும் துயரத்தையோ

இந்த மகிழ்ச்சி ஒரு பெரும் மகிழ்ச்சியையோ

நினைவுகள் கடை விரிக்கலாம்

இவற்றை தாங்காத வண்ணம்

என் இதயம் பலவீனமாய் இருப்பது

உனக்கு தெரியாமல் போயிருக்காது.....


இப்பொழுதெல்லாம்

இருண்ட அறைகளுக்குள்

கண் விழித்து உன் நினைவகளோடு

கரைகிறேன் நான்

தனிமையின் கொடுமையில்.....

No comments: