பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 6, 2007

இனி எலாம் நலமே....






இப்பொழுதெல்லாம்


எதுவும் புரிவதில்லை


புரிந்து கொள்ள விழைவதுமில்லை


கற்பனை சாயம் ஏற்றி


புதுப்பிக்க தேவை இல்லை


இயல்பாக இருக்கட்டும்


தேவை அற்ற புரிதல்களை விட


நம்பிக்கைகளே


அமைதியாய் மனதிற்கு...




ஒரு நதியை நதி எனவும்


ஒரு கடலை கடல் எனவும்


ஒரு மலையினை மலை எனவுமே


அறிந்து கொள்ளப்பட்டுருக்கிறேன்


இனி புதிதாய் சேர்க்க


எதுவும் இல்லை....




பழங்கதையோ


புராணமோ


அறிவியல் கட்டுரையோ


வாசிக்க மட்டுமே


குளிரோ வெப்பமோ


இனி உணர மட்டுமே


தேவை அற்ற குழப்பம் இல்லை....




கவிதையும் ஓவியமும்


புரிதல்களை தாண்டி


செல்ல முற்படுகையில்


தளைகள் இடுவேன்


வேறு பரிமாணத்திற்க்கு


என்னை அழைக்கும்


உடன் பாடில்லை மனதில்.....




குழந்தையின் புன்னகை


தென்றலின் குளுமை


மழை துளிகளின் மென்மை


பாலை வெப்பத்தின் வீச்சு


இவை வாக்கியங்களில்


அடங்கும் எனில்


புரிந்து கொள்கிறேன்


அக் கணத்தில்....


அது வரை


இனி எலாம் நலமே....

No comments: