பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 27, 2013

காதல்.



என் அன்பு என்று நான் குறிப்பிடும் நீ
தாங்க முடியாத சுமையாய்
என் தசைநார்களில் புகுந்து கொண்டிருக்கிறாய்
இனிமேல் என்னால்
வேறு யார் தரும் அன்பையும்
ஏற்க முடியாது
கனமில்லாத இந்தப் பாத்திரம்
அதன் விளிம்புவரை
நிரம்பியாகிவிட்டது
என்னிடமிருந்து வெகு தூரம் போய்விடு
என் நலன் பற்றி இனி விசாரிக்க வேண்டாம்
காலப் புயல் என்னை அடித்துச் சென்றால்
நான் நம்பியது அவனைத் தான்
என் விதியை நிர்ணயிக்கும்
அந்த மேலான் ஒருவனைத் தான்
என் பலத்தையும் பலவீனத்தையும் சோதிக்க
அனலில் இடப்பட்ட வாழ்க்கை என்னுடையது
காலமெல்லாம் உடனிருக்கும் நண்பனுக்காக
என் மனம் ஏங்குகிறது
யார் ஏற்றாலும் சரி
ஏற்காவிட்டாலும் சரி
அவன் தான் என் வாழ்க்கையின் சாரம்
மரியாதையுடன்
மானத்துடன்
வாழ விழைகிறேன்
என் விழிகள் நிரந்தமாக மூடும்போது
என் ஆத்மா வானத்தில் சிறகடிக்கும் போது
எனக்காகக் காத்திரு
என் அன்பே.

- இரோம் ஷர்மிளா (தமிழில் அம்பை)

No comments: