பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 26, 2013

குழந்தை போல.



 














யாரையும் வெறுக்காமல்
யாரையும் உறுத்தாமல்
நாக்கைச் சரியாக அடக்கி
நான் வாழ்ந்து விடுகிறேனே
குழந்தை போல
மூன்று மாதக் குழந்தை போல
கற்பனைச் சிலந்தி கட்டாமல்
மனத்தின் தூய கோட்டையினுள்
ஒன்றுமே அறியாத ஆத்மாவைப்போல
கனவுகளைப் பற்றிக் கொண்டு
விலை மதிக்க முடியாத தன் புதையலை
தனக்கே தனக்கு என நினைத்து
தன் விலையில்லா மணிக்கு
பாலூட்டும் அன்னையைப் போல
நானும் வாழ்ந்து விடுகிறேனே
குழந்தை போல
ஆசையில்லாத பூச்சி போல
திருப்தியுடன்
தன்னலமற்று.


-இரோம் சர்மிளா (தமிழில் அம்பை)

No comments: