பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 26, 2013

அமைதியின் நறுமணம்



 

வாழ்க்கை முடிந்துபோனதும்
உயிரற்ற கூடான என் உடலை
தயவு செய்து தூக்கிச் சென்று
தந்தை கூப்ரூவின் மலை உச்சியில்
வைத்து விடுங்கள்

என் செத்த உடல்
கோடாரியாலும் மண்வெட்டியாலும்
சிதைக்கப்பட்டு
நெருப்பில் சாம்பலாவதை
நினைத்தால்
மனதில் அசூயை பொங்குகிறது

வதங்கப் போகும் சருமம்
பூமியினடியே அழுகட்டும்
வரும் தலைமுறையினருக்கு அது உபயோகப்படட்டும்
உலோககருவாக அது மாறட்டும்

இனிவரும் காலங்களில்
நான் பிறந்த காங்லேயின் வேர்களிலிருந்து
நான் அமைதியின் நறுமணத்தைப் பரப்புவேன்
உலகின் ஒவ்வொரு மூலைக்கும்.


-இரோம் சர்மிளா ( தமிழில் அம்பை)

தந்தை கூப்ரூ: மணிப்பூரின் வடமேற்கில் உள்ள மலை. தங்கள் மூதாதையர் என்று அவர்கள் கருதும் புனித ஸ்தலம்.
காங்லேய்: காங்லேய்பாக் என்பதின் சுருக்கம். மணிப்பூரின் பழங்காலப் பெயர்.

செத்த உடல் நெருப்பில் சரியாக எரிந்து முற்றிலும் சாம்பலாக, சிலசமயம் அதை வெட்டித் துண்டு துண்டுகளாக்கி, பின் எரிக்கும் வழக்கம் மணிப்பூரில் உள்ளது.

No comments: