பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 2, 2012

தவறிய முத்தம்...

தவறிய முத்தமொன்றை
தேடியலைகிறேன்
எங்கு தவறவிட்டேன்
உத்தேசமாய் எதுவும் நினைவில்லை
கூட்டம் நிறைந்த
ஒரு பேருந்தின் நெரிசலில்
தனிமை புல்வெளியின்
பசும் நுனியில்
கடலோரத்து ஒதுங்கிய
சிறு சிப்பியில்
மழை தொடங்கிய
முதல் துளியில்
நேற்று இன்று என
தேடுதலிலே தொலைகிறது
என் நிமிடங்கள்
ஒரு ஆலமரத்தின்
விழுதுகளில்
சிறகு விரிக்கும் பறவையின்
கூறிய அலகில்
அப்பாவி மீன் ஒன்றை
குறிவைத்த தூண்டிலில்
ஒரு நள்ளிரவு பொழுதின்
விண்மீன் சிணுங்கலில்
எங்கேயும் காணமல்
பரிதவித்து ஓய்கையில்
பௌர்ணமி நிலவின்
வெள்ளொளியில்
மிதந்து வருகிறது
என்னைத் தழுவ
அம்முத்தம்
இன்னும் சில முத்தங்களோடு...

No comments: