பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 30, 2012

முக நூல் 30.06.12

ஒரே வரியில்
உன் மீதான காதலை
 சொல்லி விட முடிவதில்லை,
 நீயோ என் காவியங்களில்
அக்கறை கொள்வதும் இல்லை...

நீ வரும் ஒரு நாளுக்காக
காத்திருக்கிறது
வாழ்வின் எல்லா நாட்களும்... 

நீ கவிதை கேட்டு என்னிடம் வருகிறாய்
நானோ அந்த நேரத்தில்
மரத்தை வெட்டிக் கொண்டிருக்கலாம்
தேநீர் பருகியபடியும் இருக்கலாம்
சிரித்த படி குழந்தைகளுக்கு
கதைகள் சொல்லிக் கொண்டும்
அல்லது
ஒரு விலைமாதை அழைத்துக் கொண்டு
எங்கேனும் சென்றிக்கவும் கூடும்
உன் பொருட்டு நான் நல்லவன்
நீயும் எனக்கு அப்படியே
ஒருவேளை அசந்தர்ப்பவிதமாக
நீ வரும் வேளையில்
நான் உனக்கான கவிதையொன்றை
எழுதியபடி இருந்தால்
உனக்கு நான் நல்லவனாகவே தொடரலாம்...


No comments: