பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 6, 2012

இடமாறு தோற்றப் பிழை


சுருட்டிய மயிர்க்கற்றையென
வளைந்தும் நெளிந்தும்
குறுக்கும் நெடுக்குமாய்
சுழன்று கொண்டேயிருக்கிறாய்
நினைவறை முழுதும்
வேனிற்கால உடல் தனில்
வேர்வையாய் வழிகிறாய்
விழி பார்க்கத் தவறினாலும்
மணி அறியும் பசித்த வயிறென
வலிகளினூடே ஆறுதலாக
உன்னையே உணர்கிறேன்
பயணப்பொழுதுகளினூடே
முகத்திலடிக்கும் தென்றலாகிக்
குறுக்கிடுகிறாய்
கரம் குவித்து பிடிக்க முயல்கையில்
கண்ணடித்துப் பிரிகிறாய்
இடமாறு தோற்றப் பிழையென....

No comments: