பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 6, 2012

பூமராங்


சொற்களை தூதனுப்பிப் பார்க்கிறாய்
துவண்டு உன்னிடமே தஞ்சம் வந்தடைகின்றன
சொற்களை பூமராங்காக்கி
என்னை இலக்காக்குகிறாய்
ஆச்சரியமாய் அவை உன்னைத் தாக்குகின்றன
உன் வார்த்தைகளை யாசித்திருந்தவள் தான் என்றாலும்
தேவைகள் என்றுமே ஒன்றில் நிலைத்திருப்பதில்லையென்பதை
நீயும் ஒத்திசைப்பாய் என்பதறிவேன்
ஜூலை 30 வெள்ளி இரவு 11:47க்கு
என்னை சலித்து விட்டதாய் சொன்னாய்
என் அழைப்புகளைத் துண்டித்தாய்
அழகாய்ப் பிரியவே எனக்கு விருப்பமென்றேன்
அடுத்த நாள் அதுவே நடந்தது
எனக்கான உன் சொற்கள் மறுக்கப் பட்ட பிறகு
உனக்கான என் சொற்கள் ஜாதிக்காய் பலகைகளுக்குள்
புழுக்கள் நெளியக் கிடக்கின்றன
66 நாட்களுக்குப் பிறகு
இயல்பாய்ப் பேச விளைகிறாய்
இறுகிய என்னை இளக்க மறுக்கின்றன
வழிநெடுக சிதறிக்கிடக்கும்
உன் இற்றுப் போன சொற்கள்
விட்டுக்கொடுத்தலின் சுகம் வலிது
அதனால் தான் விட்டுக்கொடுத்திருக்கிறேன்
நான் விரும்பிய உன்னை உனக்கே...

No comments: