பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 6, 2012

கெட்டவார்த்தை...


அடிக்கடி மோக வார்த்தையொன்றை உளறும்
வரமளிக்கிறேனென்று சொல்லி மறைந்தான் கடவுள்
இதைப் பரிசோதிக்கப் பெரு விருப்பம் கொண்டவள்
காசி நகர வீதிகளில் அலையும் அகோரியைப் போலே
சுயம் மறந்து பிண்டம் சுமந்து திரிந்தாள்
உடல் உபாதையில் மருத்துவரைச் சந்திக்கையில்
தன்னையுமறியாமல் அவள் அந்த வார்த்தையை பிரயோகித்தாள்
ஏறிட்ட அவன் என் நீலப்படத்தில் நடிக்கிறாயா? என்றான்
நேற்று துணி வியாபாரி ஒருவனிடமும் இதையே சொல்லப் போக
அவன் இவள் கட்டியிருந்த புடவைக்கொரு விலை பேசினான்
மனநிம்மதி தேடியொரு ஆசிரமம் கண்டறிந்தாள்
யோகியொருவன் கேட்ட கேள்விக்குத் தவறாக
இதையே உளறி வைக்க அவன் முற்றும் ”துறந்து” நின்றான்
அச்சத்தில் உறைந்த அவள் வரம் தந்தவனை வரச் செய்தாள்
அவனை நிந்திப்பதற்கு வாயெடுத்த போது வார்த்தை குழறி
அவனிடமும் இதையே மொழிந்தாள்
அவனோ இந்தா பிடி சாபம் எனக்கூறி
அவளைக் கற்படுக்கையாகி தன் மேனியைச் சரித்துக்கொண்டான்...

No comments: