பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 27, 2012

பிரதிகள்...


எதுவுமே புதிதில்லை
நீ
நான்
நம் கனவுகள்
சில கவிதைகள்
எல்லாமே...
யாரோ ஒருவர் நமக்கும் முன்னரே
கனவுகளையும்
கவிதைகளையும்
எழுதியிருக்கக் கூடும்
வெறும் பிரதிகளே நம்முடையவை
இது வரை எவருமே
எழுதி விடாத
கூறி விடாத ஒன்றை
நீயும் நானும்
சொல்லாமலே இருப்போம்
அதில் தான்
மிஞ்சியிருக்கிறது
உண்மையான கனவும் கவிதையும்...

No comments: