பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 13, 2011

நான் தொலைத்த ஊரில்


செம்மண் புழுதிக் காட்டில்
பொங்கி வருகிறது வெயிலின் வாசம்
மழை நனைத்த இரவு முடிந்து
காலையில் பசுமை போர்த்தும்
புல் மேய இழுத்துப் போகும்
என் வீட்டு ஆட்டுக் குட்டி
வெறும் கால்களால்
வரப்புப் பாதையில் நடை
எருமைக்கென வெயிலில்
சிறு துணியை தலையில் கட்டிக் கொண்டு
புல் அறுக்கும் பாட்டி
ஈரம் காய்வதற்குள் விதைக்கப் படும்
சோள விதைகள்
எஞ்சினை சுழற்றி விடும்
அண்ணனின் லாவகம்
பக்கத்து ஓடையில்
காத்திருக்கும் நாரைகள்
மதிய நேர வேப்பமரக் காற்று
சலங்கை கட்டிய மாட்டுவண்டிப் பயணம்
மரத்தடி கருப்பராயன்
பத்து மணி பழைய சோறு
கம்புச் சோறும் மிளகாய் வத்தலும்
கற்றாழை
கள்ளிப் பழம்
பனங்கிழங்கு
அக்கா குருவி
மாலைநேர மிதிவண்டி
இரவு நேர அரிக்கேன் விளக்கு
அண்ணமார் கதை கூத்து
எத்தனை எத்தனை இழந்திருக்கிறேன்
குளிரூட்டப் பட்ட அறையில்
அலுவலக கணினியில்
வாழ்வைத் தொலைத்த படி..

1 comment:

Murali said...

machiy ungaa offical a/c potu erknagalla daaa !!!!!!?????