பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 13, 2011

சிறு துளிகள்


அம்மா
அப்பா
மனைவி
அனைவரும் வேலைக்கு!
குழந்தைகள்
பள்ளிக்கு!!
என்ன செய்து கொண்டிருக்கும்
தனிமையில் வீடு...

நேற்று மாலை
நீ பறிக்கத் தவறிய
மல்லிகைப் பூக்களுடன்
பேச வருகிறது
இரவிலும் வண்ணத்துப் பூச்சிகள்...

பூச்சாண்டிகள் இல்லாமல்
தானாகவே சாப்பிடும்
குழந்தைகள்
சீரியல் பார்க்கும்
அம்மாவுக்கு பயந்தபடி...

பேருந்து கிளம்பி விட்டது
மக்கள் கூட்டம்
சில்லறைகளின் சப்தம்
முதியோருக்கான இருக்கையில்
நீயும் நானும்
சிறிதும் கூச்சமின்றி...

மலர்களைப் பற்றி
யோசித்துக் கொண்டிருக்கும்
பொழுதெல்லாம் நினைவில் வருகிறது
எப்போதோ வெடித்து அப்பாவியின்
உயிர் குடித்த துப்பாக்கி தோட்டா...

பொய்களைப் பரப்பி விட்டு
நிஜங்களில் ஒளிந்து கொள்வேன்
வெளிவருவதற்குள்
அடுத்த பொய்களை
தயாரித்து விடுவேன்...

No comments: