பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 23, 2011

இடைவிடாத ஏக்கங்கள்


ஒரு நாளின் நள்ளிரவுப்
பொழுதின் தொடக்கத்தில்
உன் கன்னத்தில் பதித்த
முத்தத்தின் ஈரத்தை
சுமந்து திரிகிறது உன்
வீட்டு வரவேற்பறை காற்று...

மின்னலென பார்வைகள்
புன்னகைகள்
ஆதரவாய் தலை கோதிய
விரல்களென அத்தனைக்கும்
ஆசைப் படுகிறது
விலகி வந்த உயிரொன்று...

நிலவின் ஒளியில்
பார்த்த உன் முகத்தை
பகல் பொழுதில் புகைப் படங்களாக்கி
ரசித்து மகிழ்கிறது
இடைவிடாத ஏக்கங்கள்...

வறண்டு போன பாலை நிலத்தில்
சிறு சாரலென நீ பொழிந்து போன
மழையில் மலர்ந்திருக்கிறது
சில கனவுப் பூக்கள்
ஒரு வேளை நாளைய
கண்ணீர் பூக்களாகவும்
இருக்கக் கூடும்....

மழை கானா பூமியில்
சுமக்கும் குடையென
உன் நினைவுகள்
பாரம் என தூக்கி
எறிய முடியவில்லை என்னால்...

நேசிப்பதற்கு எப்பொழுதுமே
இரண்டு இதயங்களும்
பிரிந்து செல்ல ஒரு
இதயமுமே
போதுமானதாக இருக்கிறது...

என் நினைவுகளில் நீ
அங்கு விழித்திருக்கலாம்
நமக்கான கனவுகளோடு
நானும் இங்கு விழித்திருக்கிறேன்
உனக்கான கவிதைகளோடு...

1 comment: