பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 1, 2011

படுகொலைகள்















சில கணங்களில் நிகழ்கிறது
மனித உறவுகளின் படுகொலைகள்
யாரையும் கேட்காமல்
யாருக்கும் தெரியாமல்....

இங்கே கொலைக்கு
தேவைப்படுவதெல்லாம்
நேசிக்கும் மனமும்
கோபம் கொண்ட இதயமுமே...



சுடு சொற்களை வீசி விட்டு
இனி என்னால் உனக்கு
எந்த தொந்தரவும் இல்லை
எனும் போது நிகழ்ந்தே விடுகிறது
அக் கொலைச் செயல்...

ஏதாவது தவறுகள்
செய்திருந்தால் மன்னித்துக் கொள்
எனும் போது
சிதையில் தள்ளப்படுகிறது காதல்...


இனி தவிக்கவோ
துடிக்கவோ வேண்டி இருக்காது
உன் வாழ்க்கை உனக்கு
என் வாழ்க்கை எனக்கு
என்கிறது குரல் ...

இவ்வளவு எளிதாய்
நிகழ்ந்துவிடுமா ?
அன்பு கொண்ட
இதயங்களின் முறிவு....

இங்கே எல்லோரும்
கொலையை செய்து விட்டோ,
தடுக்கவோ முடியாமல்
நிற்கிறோம்
கண்ணீர்
நினைவுகளோடு....


No comments: