பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 8, 2011

தாமரை






தாமரையை பற்றி கவிதையொன்று
எழுதச் சொன்னாய்.....

தாமரைப் பூவை
தாமரைப் பூ என்றே அழைப்பதைத் தவிர
வேறென்ன சொல்லி விட முடியும்....
சில நேரங்களில் வண்ணங்களைப் பற்றியோ
கோர்க்கப்படும் சரங்களிலோ தாமரை பற்றி
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் நானோ
தாமரை பூத்த குளங்களைப்
ரசித்துக் கொண்டிருக்கிறேன்...
இளஞ் சிவப்பு, ஊதா, வெண்மை என
பல தாமரைகள் உண்டு
நான் ரசித்ததென்னவோ
அடர் சிவப்பில் குருதியின் நாளங்களை
கொண்ட மலரொன்றை...


தன் இரு புறங்களிலும்
நீர் ஒட்டி விடாத இலைகளை பரப்பி
அழகான குழந்தை போல இதழ்
விரித்துச் சிரிக்கிறது,
எப்பொழுதும் குளிர் நீரில்
இருப்பதால் என்னவோ அதி மென்மையாய்
விரல்களால் தீண்டவும் பயம் என்னில்...
நடுங்கும் கைகளோடு நான் வருடும்
வேளையொன்றில்
தேனுண்ணும் பறவையென மாறி
சிறகடிக்கிறது ஒளிந்து கொள்ளும் மனம்....
சில வக்கிர மனங்கள்
பறித்து சூடி தங்களை அழகு படுத்திக்
கொள்ளும் பொழுது
தாமரைப் பூக்கள் பூக்களாய் இருப்பதில்லை
வெறும் காகிதப் பூக்களாகவே,
என்னில் என்றும்
பூக்களையும் நீர் நிலைகளையும்
பிரிதரிந்தவனில்லை
வெறும் இதழ்களை நம்பி வந்தவன்
வேர்களில் சிக்கி தவிக்கிறான்
நான் வேர்களை நம்பியவன்...
எல்லோரும் சொல்வது போல்
எல்லாமே பூக்களுமே ஒன்று அல்ல
ஒரு பூவின் வாசனையை
வேறு ஒரு பூவிடம் தேடுபவன் அறிவிலி
நான் ஒரு ரசிகனே
எனக்கென மலர்ந்த
தாமரையை ஒன்றை
அதன் இதழ்களை
அதன் பரந்த இலைகளை
நீர் மறைத்த வேர்களை
செம்மை பரவிய அதன் நிறத்தை....


இனி என்ன,
தாமரைப் பூவை
தாமரைப் பூ என்றே அழைப்பதைத் தவிர
வேறென்ன சொல்லி விட முடியும்....
தனக்கான சூரியன் எதுவென்று
தாமரைக்கு தெரியும்....
என்னவளுக்கு சொந்தமாய்
இருக்கிறது ஒரு தாமரையும்
ஒரு ரோஜாவும்...

No comments: