பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 6, 2007

காதல் வாழ்க்கை -1


"திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயிக்க படுகின்றன"

அவ்வளவு உயரத்தில்

ஒரு அசம்பாவிதம்

நடந்தால்

எப்படி தடுக்க?


காதலில் நீ எப்போதுமே

அமைதி தான்!

நான் பேசுவதை கவனமாய் கேட்பாய்

உன் சிறு சிறு அசைவுகளை

ரசித்து கொண்டே

நானும் தொடருவேன்!!!


இன்று நான் பேசுவது

அலுவலகத்தில் மட்டுமே

மீறி பேசினால்

பதிலுக்கு பூரி கட்டைகளும்

பறக்கும் தட்டுகளுமே பேசுகிறது

என்ன செய்ய?


என் மனைவிக்கு

அன்பு அதிகம் என் மீது

நான் அடி பட்டாலும்,

வலிக்கிறதா என்று

கேட்கும் போது மட்டும்......


அலுவலகம் விட்டு வந்ததும்

காபி கொடுப்பாய்

அப்பொழுதே தெரிந்து விடும்

நான் மார்க்கெட்

செல்லவேண்டும் என்பது....


இரவு 11 மணிக்கு

தோள் சாய்கையில்

கேட்பாய்

அலாரம் வச்சீங்களா?

தேவை இன்றி

நினைவில் வரும்

அதிகாலை பால் பூத்....


பொண்ணு படிக்கவே

இல்லை பா...

எனக்கு புரியும்

"கொஞ்சம் சொல்லி கொடு"

என்கிறாய்.


பேப்பர் பையனுக்கு

என்ன சொல்ல?

இன்னிக்கு ரசம் தான்...

கப் ல தயிர் இருக்கு...

பக்கத்து வீட்டில

கார் வாங்கி இருக்காங்க....


இப்படி எத்தனையோ

இருந்தாலும்

பிடிக்கிறது அவள் வைக்கும்

வத்த குழம்பு...


இப்பொழுதெல்லாம்

மாலை வந்தாலே

நீ சொல்லும் அனைத்தும்...?

சரியாகிவிடுகிறது...

இரவு பட்டினி கிடக்க

என்னால் முடியாது

( சோறு இல்லாம பா)


விடுமுறை வந்தால்

கொண்டாட்டம் தான் உனக்கு

வித விதமாய் சமைத்து

கொடுக்க சொல்லுவாய்

வாசிங்மிசின், கிரைன்டர்

என எதுவும் கேட்டதில்லை நீ

பிறகு நான் எதற்கு....


சேலைகள் ,சுடிதார்கள்

மடிப்பு கலையாமல்

இருக்க வேண்டும் உனக்கு

இஸ்திரி பெட்டி

சூடு பட்டு

கை உதறும் போதும்...


இருந்தாலும் விடுமுறை வேண்டும்

எனக்கு.....

எனக்காக அனைத்தையும்

விட்டு வந்தவளை

நெஞ்சுக்குள் தூங்க வைக்கும்

மதிய வேளை

ஒன்று கிடைக்க.....


நீ ஊருக்கு போன

ஒரு நாளில் தொலை பேசியே

துணை நமக்கு

சீண்டல்கள்

சிரிப்புகள்

அழுகை

கோபம்

பிடிவாதம்

என அனைத்துமாய் கலந்து

கடைசியில் சொல்லுவாய்

"உன்ன பாக்காம இருக்க முடியல" டா

அது போதும் எனக்கு....


ஒரு நாள் மாலை

உன் கல்லூரி தோழி வந்திருந்தாள்

இருவரும் அமர்ந்துபேசி

கொண்டு இருந்தீர்கள்

நெடு நேரம்....

சிறிது நேரம் கழித்து

தேநீர் கோப்பைகளுடன்

வந்தேன்ஆச்சரியமாய் உன் தோழி !!

அவள் கண்களில் தெரிந்தது

பொறாமை மட்டுமே

அவள் போனதும்

என்னிடம் "ஏண்டா என் மானத்தை வாங்கர"

என்றாய்

ஆனாலும் உன் கண்களில்

நன்றி தெரிந்தது..

எத்தனை முறை

நீ கொண்டு வந்திருப்பாய்

எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடு...

1 comment:

mohanapriya said...

A Nice Married Life this is :)