பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 19, 2007
















தேநீரும்
சிகரெட் துண்டுகளும்
வாழ்வின் ஆதாரமாய்....


இதழ் தொலைத்து
தேடும்
புன்னகை பூக்கள்.....



பகலிலும்
வெளிச்சம் தேடும்
விழி பள்ளங்கள்....


எழுதுகோல் இன்றி
அறை எங்கும் நிறைந்து
கிடக்கும் வெற்று தாள்கள்....


இதயம் மட்டும்
உன் நினைவுகளால்
நிரம்பி கொண்டே....


வெளிப்படுத்த முடியாத
கோபமும்
காதலும்
கவிதையும்
மன நோயின் ஆரம்பம் அன்றி
வேறில்லை.....

2 comments:

j.k........squire said...

thoza................enna solla............... vazthukal

Unknown said...

நன்றிகள் தோழரே