பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 19, 2007

ஆண் மகன்


பெண்மையின் பூரிப்பு

கட்டி கொண்ட மார்பின்

தீரா வேதனை

முழுமையின் கர்வம்

என்னுள்!!!!!!


பிறந்தது பெண்

என்ற போது கேட்டாய்

நம் குழந்தையா?

உன் குழந்தையா?


கோபம் தான்

ஒளித்து கொண்டு

சொன்னேன்

"உன் ஆண்மையில்

உனக்கு ஏன் சந்தேகம்"


இப்போது தெரிகிறது

உண்மையில்

நீ ஆண் மகன் இல்லை

அழகாய் சிரித்தது

உன் குழந்தை!!!!!!!

No comments: