உட்காரப்
புல்வெளி
எதிரே
நீர் வெளி
நீர் மேல் எண்ணெயாய்
சூரியன்
பால் சொட்டுகளாய்
பறவைகள்
முட்டாமல் மோதாமல்
இணக்கமாய் காற்று
தூரத்து ரயிலோசைக்கும்
செவி கூசும் நிசப்தம்...
...........
.....
....
எல்லாம் தவிர்த்து
கவனமாய்க் காத்திருக்கிறான்
கரையில் ஒருவன்
தொண்டை கிழித்து
கண்ணைத் துளைத்த
தூண்டில் முள்ளுடன்
துடிக்கும்
மீன் ஒன்றைக்
காணும் ஆவலுடன்....
-எஸ். கோபிநாத்
பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
Sep 27, 2011
காதல் தீவிரவாதி...
நான்
தீவிர வாதி தான்...
ரசனையான
வாழ்க்கையை
வெறித்தனமாய்
நேசித்த தீவிரவாதி....
சின்ன சின்னதாய்
ஏராளக் கனவுகள்
ஜெலட்டின் குச்சிகளை
என்னிடம் உண்டு....
பெண்ணடிமைத் தனக்
கட்டுப்பாடுகளை
உடைத்தெறிய
பலமுறை
கொரில்லாத் தாக்குதலகள்
நடத்தியதுண்டு
பெற்றோருடன்...
கடைசியில்
காதல் தடுப்புச் சட்டத்தில்
கைது செய்யப் பட்டேன்
குடும்ப கௌரவத்தை
குண்டு வைத்து தகர்த்த தாய்
குற்றச்சாட்டு...
தினம் தினம்
சித்திரவதைகள்
சொல்லடிகள்
இறுதியில்
நாள் குறிக்கப்பட்டது...
முன்பின் அறியாத
அந்நியனின் காலடியில்
ஆயுள் சிறையென
கல்யாணத் தீர்ப்பு
எழுதப் பட்டது....
பூச்சரங்கள்
அலங்கரித்த
அறைக்குள் வந்தான்
புருஷன் எனும் போலீசுக்காரன்...
அன்பான சொல் இல்லை
ஆதரவான பகிர்தல் இல்லை
.........
.....
...
அவ்வளவுதான்
முடிந்து விட்டது...
முதலிரவு
என்கவுண்டரில்
மொத்தமாய்
செத்துப் போனேன்
நான்....
-உமா சம்பத்
தீவிர வாதி தான்...
ரசனையான
வாழ்க்கையை
வெறித்தனமாய்
நேசித்த தீவிரவாதி....
சின்ன சின்னதாய்
ஏராளக் கனவுகள்
ஜெலட்டின் குச்சிகளை
என்னிடம் உண்டு....
பெண்ணடிமைத் தனக்
கட்டுப்பாடுகளை
உடைத்தெறிய
பலமுறை
கொரில்லாத் தாக்குதலகள்
நடத்தியதுண்டு
பெற்றோருடன்...
கடைசியில்
காதல் தடுப்புச் சட்டத்தில்
கைது செய்யப் பட்டேன்
குடும்ப கௌரவத்தை
குண்டு வைத்து தகர்த்த தாய்
குற்றச்சாட்டு...
தினம் தினம்
சித்திரவதைகள்
சொல்லடிகள்
இறுதியில்
நாள் குறிக்கப்பட்டது...
முன்பின் அறியாத
அந்நியனின் காலடியில்
ஆயுள் சிறையென
கல்யாணத் தீர்ப்பு
எழுதப் பட்டது....
பூச்சரங்கள்
அலங்கரித்த
அறைக்குள் வந்தான்
புருஷன் எனும் போலீசுக்காரன்...
அன்பான சொல் இல்லை
ஆதரவான பகிர்தல் இல்லை
.........
.....
...
அவ்வளவுதான்
முடிந்து விட்டது...
முதலிரவு
என்கவுண்டரில்
மொத்தமாய்
செத்துப் போனேன்
நான்....
-உமா சம்பத்
Sep 22, 2011
அவதூறு பேச்சாளி
ஒரு சிற்றாறிடம்
கடலைப் பற்றி
ஒரு முறை பேசினேன்
என்னை ஒரு
மிகைப் படுத்தி பேசும்
கற்பனாவாதி எனச்
சிற்றாறு நினைத்தது!
சிற்றாறைப் பற்றி
கடலிடம்
ஒருமுறை பேசினேன்
குறைத்துப் பேசும்
அவதூறு பேச்சாளி என
கடல்
நினைத்தது!!
ஒவ்வொரு
உயர்ந்த மனிதனும்
அவனது முடிவெடுக்கும்
தன்மையில்
ஏதாவதொரு சிறிய ஒன்று
இருக்கும் என
நான் அறிவேன்!
அந்த சிறிய ஒன்று தான்
அவர்களது
செயலற்ற தன்மையை
பித்துக்குளித் தனத்தை
அல்லது
தற்கொலையினை
தடுத்திருக்கிறது!!
கடலைப் பற்றி
ஒரு முறை பேசினேன்
என்னை ஒரு
மிகைப் படுத்தி பேசும்
கற்பனாவாதி எனச்
சிற்றாறு நினைத்தது!
சிற்றாறைப் பற்றி
கடலிடம்
ஒருமுறை பேசினேன்
குறைத்துப் பேசும்
அவதூறு பேச்சாளி என
கடல்
நினைத்தது!!
ஒவ்வொரு
உயர்ந்த மனிதனும்
அவனது முடிவெடுக்கும்
தன்மையில்
ஏதாவதொரு சிறிய ஒன்று
இருக்கும் என
நான் அறிவேன்!
அந்த சிறிய ஒன்று தான்
அவர்களது
செயலற்ற தன்மையை
பித்துக்குளித் தனத்தை
அல்லது
தற்கொலையினை
தடுத்திருக்கிறது!!
யார் நிரபராதி?
நுழைவாயிலில்
எனது விருந்தாளியை
நிறுத்திச் சொன்னேன்
இல்லை;
நீ நுழையும் போது
உன் பாதத்தை
துடைத்துக் கொள்ளாதே;
ஆனால் நீ
வெளியே சென்றவுடன்
துடைத்துக் கொள்;
உனது தேவையாய்
இருப்பதை விட
எனக்கு அதிகம் தேவையாய்
இருப்பதை கொடுப்பதல்ல
கொடை!
என்னை விட உனக்கு
அதிகம் தேவையாய் இருப்பதை
எனக்கு கொடுப்பதே
கொடை!
ஒரு நாள் பசிக்கும்
ஒரு மணி நேர தாகத்திற்கும்
இடையில் உள்ள
வித்தியாசம் தான்
பெரும் பணக்காரனுக்கும்
பரம ஏழைக்கும்
இடையிலுள்ள
வித்தியாசம்...
உன் அறிவுக்கு
எட்டிய மட்டும் தான்
உன்னால்
மற்றவரைப் பற்றி
எடை போட முடியும்
இப்பொழுது சொல்!
நம்மில் யார்
குற்றவாளி
யார் நிரபராதி?
இங்கு
மிகச் சிறந்த ஒழுக்கமாய்
இருக்கும் ஒரு
நற்குணம்
மற்றோர் உலகத்தில்
மிகத் தாழ்ந்த ஒன்றாக
இருக்கலாம்...
எனது விருந்தாளியை
நிறுத்திச் சொன்னேன்
இல்லை;
நீ நுழையும் போது
உன் பாதத்தை
துடைத்துக் கொள்ளாதே;
ஆனால் நீ
வெளியே சென்றவுடன்
துடைத்துக் கொள்;
உனது தேவையாய்
இருப்பதை விட
எனக்கு அதிகம் தேவையாய்
இருப்பதை கொடுப்பதல்ல
கொடை!
என்னை விட உனக்கு
அதிகம் தேவையாய் இருப்பதை
எனக்கு கொடுப்பதே
கொடை!
ஒரு நாள் பசிக்கும்
ஒரு மணி நேர தாகத்திற்கும்
இடையில் உள்ள
வித்தியாசம் தான்
பெரும் பணக்காரனுக்கும்
பரம ஏழைக்கும்
இடையிலுள்ள
வித்தியாசம்...
உன் அறிவுக்கு
எட்டிய மட்டும் தான்
உன்னால்
மற்றவரைப் பற்றி
எடை போட முடியும்
இப்பொழுது சொல்!
நம்மில் யார்
குற்றவாளி
யார் நிரபராதி?
இங்கு
மிகச் சிறந்த ஒழுக்கமாய்
இருக்கும் ஒரு
நற்குணம்
மற்றோர் உலகத்தில்
மிகத் தாழ்ந்த ஒன்றாக
இருக்கலாம்...
Subscribe to:
Posts (Atom)