பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 17, 2014

என் வானம், என் வனம்...

இப்படித்தான் வெளியேறினேன்
அக்கூட்டின் கதகதப்பிலிருந்து,
என்னை நேசிப்பவர்களிடமிருந்து
குறிப்பாக உன்னிடமிருந்து,
என் சுவடுகளை
காலடித் தடங்களை
நிழலின் வெளிச்சத்தை அப்படியே விட்டுவிட்டு,
கொண்டாடும் கூட்டத்தை விட்டு
அன்புகாட்டும் மனிதர்கள் விட்டு
வருவதென்பது ஆகப்பெரும் வலிதான்,
இருந்தும் இப்படியாய் ஒளிந்து கொள்வது
பிடித்தமானதாக இருக்கிறது,
எதற்காகவும்
யாருக்காகவும் வளைந்து கொடுக்கா உறுதியை
மீண்டும் கைகொள்கிறேன்,
இது தவம்,
இது வரம்,
இது மோட்சம்,
கூட்டை விட்டுப் பிரியாமல் பறவைகள்
வானம் அறியாது,
அலைதல் வேறாக இருப்பினும்
அது என் வனம்,
என் சிறகு,
என் பறத்தல்...

ஆமென்.

No comments: