பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 13, 2014

கவிதை...





தொடக்கமுமின்றி
முடிவுமின்றி சிக்கலாகிக் கொண்டேயிருக்கிறது
அக்கவிதை.
அது ஒரு காதலையோ
அதன்பின் அதன் மரணத்தையோ
பாடுவதாக வைத்துக் கொள்வதில்
எனக்கும்
உங்களுக்கும்
எந்த வகையிலும்
பிரச்சனைகள் இருக்கப் போவதில்லை.
இன்னமும் கூட
அக்கவிதை
அப்படியே தான் இருந்து தொலைக்கிறது
தொடக்கமும்
முடிவுமின்றி...

No comments: