பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 16, 2012

காதலெனும் வலை


மெல்ல மெல்ல உன்னைச் சுற்றி
பின்னிக் கொண்ட வலையில்
நானே விழுகிறேன்
காதெலெனும் பெயரிட்டு
பார்வையில் விழத் துடிக்கிறது
இன்னுமொரு பெயரற்ற நாள்
உன் நினைவுகளோடு வாழத் துடிக்கும்
இன்னும் சில மணித் துளிகள்
ஆதரவாய் தலை கோதி
புன்னகையில் எனை செதுக்குகிறாய்
சிவந்த பூக்களை எப்பொழுதும்
கொண்டு வருகிறேன் உன்னிடம் சேர்க்க
உறக்கத்தோடு சண்டை போட்டு
கனவுகளில் உனக்கான கவிதைகள் நிறைய
விழித்துக் கிடக்கிறது என் இரவு
இருவருமாய் பகிர்ந்து கொண்ட
நகைச் சுவை துணுக்குகள்
உனக்கென நான் காத்திருந்த
சாலையோர வேப்பமரம்
எதோ ஒரு காட்டுப் பூவின் நறுமணம்
நீ கடக்கும் போதெல்லாம் வீசிப் போகிறது
இப்படித் தான்
என் நினைவுகளோடு உன்னையும்
தைத்துக் கொண்டு அலைகிறது மனம்
இன்னும் மீதமாய் இருக்கிறது
நீ எனக்கென விட்டுச் சென்ற உடல்
எங்கிருந்தால் என்ன
நலமாகவே இருக்க வேண்டுகிறேன்
எதற்கும் உடன் வைத்திருக்கும்
என் உயிர் பிரியும் வேளையில்
யாருக்கும் தெரியாமல் உன் காதல்
உண்மையென்பதை சொல்
என் வாழ்விற்கும் ஒரு அர்த்தமிருக்கட்டும்...

No comments: