பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 20, 2012

சில உண்மைகள்...


நான் பெண் என்பதே புரிவதில்லை உனக்கு
என் மீதான சமூக கட்டுகள் மட்டும் புரிந்துவிடுமா என்ன?
உன் மீதான காதலைக் கூட உறவுகளிடம் சொல்லி
ஆசி பெறவோ அழுது புலம்பவோ முடியா நிலை...
மனதோடு காதலைப் புதைத்துக் கொண்டு
புன்னகையோடு வலம் வரும் அதே சாபம்
எனக்கும் பரிசளிக்கப் பட்டிருக்கிறது...
இன்னுமொரு மும்தாஜென நானோ
ஷாஜகானென நீயோ வாழ முடியாது
இருக்கும் தாஜ்மஹாலும் காதலின்
காட்சிப் பொருளாய் மாறிக் கிடக்கிறது...
உன்னைப் பார்த்துப் புன்னகை செய்யவோ
காதோரமாய் உன் குரல் கேட்கவோ
மழை நனைக்கும் இரவொன்றில்
நிலவை துணைக்கழைத்து நடை பயிலவோ
ஏன் ஒரே ஒரு வேளை உனக்காக
உணவு சமைத்துப் பரிமாறவோ கூட இயலாது...
என்னைப் பார்த்து கேலியாய் சிரிக்கிறாய்
எனக்கும் இது கொடுமையாகத் தான் இருக்கிறது
உன்னைச் சந்தித்த நாளை ஒன்றினை
நான் சபித்துக் கொண்டிருக்கிறேன்...
எனக்கே புரிவதில்லை நான் யாரென்று
உன்னைக் கூட தண்டிக்கத் தோன்றுகிறது
என் அழகான வாழ்வில் நீ புயல்
நீ போன பின்னதான என் வாழ்வில்
வெறும் மணற் குவியல் சித்திரங்கள் மீதம்...
இனி எப்படிப் புரிந்து கொள்வாய்
என்பதில் தான் இருக்கிறது உன் வாழ்வு
என்னைப் பற்றி யோசிப்பாய்?
உன்னால் யோசிக்க மட்டுமே முடியும்
நேசித்தலும் யோசித்தலுமே உனக்கானவை
எதற்கும் கொஞ்சம் நிகழ்காலத்திற்கு வா
அங்கு உன்னைச் சுற்றி அலையும்
சில நிதர்சன உண்மைகள்...
எத்தனையோ புதைந்த நேசங்களை
மண்மூடிப் புதைத்துக் கொண்டுதானிருக்கிறோம்
சடலங்கலெனப் பெயரிட்டு சிறிதும் தயக்கமின்றி...
இதில் நீயும் நானும் மட்டும் விதி விலக்கா என்ன?

2 comments:

கௌசி கந்தசாமி said...

தெளிவான நடை..
அருமையான உண்மை வரிகள்..
தொடர்ந்து எழுதுங்கள்.. :D :D

கௌசி கந்தசாமி said...

தெளிவான நடை..
அருமையான உண்மை வரிகள்..
தொடர்ந்து எழுதுங்கள்.. :D :D