பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 10, 2011

கானல்நீரும் தாகமுமாய்...


என்றுமே பலித்துவிடாத
கனவுகள் நினைவெங்கும்
சிதறிக் கிடக்க கதறி அழுகிறேன் உன்னிடம்
சில நேரங்களில் உன் தோள் சாயல் கூட
ஆறுதலாய் இல்லை
எழுந்ததும் உன்னை பிரிய நேரிடும்
அச்சம் சுமந்த மனதில்
அடிக்கடி நீ சொல்லும் கானல் நீர்
மட்டுமே தெரிகிறது
எல்லா கவசங்களையும் மீறித்
துளைக்கிறது சில கூர் அம்புகள்
நியதிகளின் பெயரில்
அறுந்து தொங்கும் சதைகளுடன்
பயனற்று கிழ் விழவும்
தாங்கிப் பிடிக்கிறது அதே கானல்வெளி
எரியும் உடலுடன் சுற்றி சுற்றி
வெறும் கைப் பிடி சாம்பலென
உதிரும் வேளையில் வருகிறது தென்றல்
உன் வாசலில் தூவ
கனவுகளை எல்லாம் புதைத்துக் கொள்கிறேன்
நினைவுகளையெல்லாம் தூக்கிலிட்டு
இனி என்ன
கானல் நீரும்
அதன் மீதான தாகமுமாய்
மீண்டும் மீண்டும்
தொலையட்டும் வாழ்வு
சாவுக்கும் வாழ்விற்குமான
இடைவெளிகளை நிரப்பிக் கொண்டே...

1 comment:

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.